ஹலோ ஒரு நிமிடம்…

இந்தியா ரஷ்யாவை ஏன் ஆதரிக்கிறது

உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்! தர்மம் என்ற நிலைபாட்டில் ஜகத்குருவாக இருக்கும் இந்தியா!

உலகில் எந்த ஒரு நாடு பிற நாட்டின் மீது படையெடுத்தாலும், அதை எதிர்க்கும் இந்தியா, தற்போது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு ஆதரவாக நிற்பது ஏன்? ரஷ்யா தனது நாட்டையும், மக்களையும் காப்பாற்றவே இந்த போரை செய்கிறது. அமெரிக்காவின் அடாவடித்தனம் தான் இதற்கு காரணம். இருந்தாலும் ரஷ்யா போரில் மிகவும் லேசாக தான் ஈடுபட்டு வருகிறது. இன்று உலகமே ரஷ்யாவிற்கு எதிராக நிற்க இந்தியா மட்டுமே கை கொடுக்கிறது. உக்ரைனும் இந்தியாவை மட்டுமே நம்புகிறது என்பது தான் நிஜம். ஏன் ரஷ்யாவை ஆதரிக்கிறது இந்தியா??

காரணம் ஆழ்ந்த நன்றி உணர்வு தான்…

1971ல் இந்தியாவை சுற்றி வளைத்தன உலகநாடுகள்.

“இந்தியாவை சீண்டினால் அது எங்களை சீண்டுவது போல” என்று எச்சரித்து உலக நாடுகளை விரட்டி, இந்தியாவை பாதுகாத்த, “இந்தியாவின் உற்ற நண்பன் சோவியத் யூனியன்” தான்….

அன்று என்ன நடந்தது என்பதை சற்று பின்நோக்கி பார்ப்போம் !…..

நவம்பர், 1971…

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான பதட்டம் உச்சகட்டத்தை நெருங்கியது.

சோவியத் யூனியன், “இந்தியாவுடனான போர் பாகிஸ்தானுக்கு நல்லதில்லை” என்று, பாகிஸ்தானை கூப்பிட்டு எச்சரிக்கிறது. ஆனா அந்த காலகட்டத்துல, பல வலிமையான மேற்கத்திய நாடுகளோட சப்போர்ட், பாகிஸ்தானுக்கு இருந்தது. சோவியத் யூனியனும், ‘இது இரு அண்டை நாடுகளோட பிரச்சனை. இது முடிவுக்கு வரணும்‘ என்ற அளவுக்கே அதை பார்த்தது.

ஆனா 1971 டிசம்பர் 3-ம் தேதி அன்னைக்கு சாயங்காலம், இந்தியா எதிர்பார்க்காத நேரத்தில், பாகிஸ்தான்… திடீருன்னு ஆக்ரா தளம் உட்பட 11 இந்திய விமானப்படை தளங்கள் மேல, கடுமையான தாக்குதலை நடத்தி முடிச்சிடுச்சு.

உடனடியா பிரதமர் இந்திரா காந்தி, “பாகிஸ்தானுடன் போர் ஆரம்பம்“ன்ற செய்தியை, நாட்டு மக்களுக்கு ரேடியோவில் அறிவிச்சாங்க.

இந்தியாவோட முப்படைகளும் பாகிஸ்தானை சூழ்ந்து, மிகப்பெரிய தாக்குதல்களை ஆரம்பிச்சது. 1971 டிசம்பர் 4-ம் தேதி ராத்திரி… இந்திய கடற்படை, கராச்சி துறைமுகத்தை சின்னா பின்னமா சிதறடிச்சுட்டு, இந்திய எல்லைக்குள் பத்திரமாக வந்துடுச்சு. இதுல கொடுமை என்னன்னா… கராச்சி துறைமுகத்தை காப்பாத்த வந்த பாக் போர்விமானங்கள் துறைமுகத்துல நிற்பது தங்களோட போர் கப்பல்னுகூட தெரியாம, PNS ஜுல்பிஹர் என்ற தங்களோட ராணுவ கப்பலையே தாக்கி அழிச்சிடுச்சு.

திடீர்னு, நிறைய மேற்கத்திய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவா களமிறங்க… அதுவரைக்கும் இந்தியாவின் கைக்குள் இருந்த போர்க்களம், கையவிட்டு நழுவ ஆரம்பிச்சது.

ஆரம்பத்துல இருந்தே அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவா இருந்தது. அமெரிக்க அதிபர் நிக்ஸன்… ஜோர்டான், ஈரான், பிரான்ஸ், துருக்கி நாடுகளோட போர் விமானங்களை, பாகிஸ்தானில் நிறுத்தி வெக்கச் சொல்லி உத்தரவிட்டார். மேலும்… அமெரிக்க கடற்படையின் *செவன்த் ப்ளீட்” என்ற பிரிவு, (இந்த ‘செவன்த் ப்ளீட்’ என்பது… 70 போர் கப்பல்கள், 300 போர் விமானங்கள், 40 ஆயிரம் வீரர்களை கொண்ட…. அமெரிக்க கடற்படையோட மிகப்பெரிய பிரிவு ஆகும்) பிரிட்டனோட கடற்படையோட சேர்ந்து, இந்திய நகரங்களை தாக்குவதற்க்காக வங்காள விரிகுடாவுக்கு அனுப்பி வெச்சாரு. மேலும்… தேவைப்பட்டால்
பாகிஸ்தானுக்கு உதவச்சொல்லி, சீனாவையும் கூப்ட்டாரு.

அதோட விடல… USS Enterprise என்ற மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலையும், வங்காள விரிகுடாவுக்கு அனுப்பிட்டார். அந்த கப்பலோட சேர்ந்து, பிரிட்டனோட HMS Eagle-ன்ற மிகப்பெரிய போர்க்கப்பலும், பாகிஸ்தானுக்கு உதவி செய்ய, இந்தியாவோட கிழக்கு எல்லையான வங்காள விரிகுடாவுக்கு அணிவகுத்து வந்தது.

உலகத்தோட பெரும்பாலான வல்லரசுகள், இந்தியா என்ற ஒற்றை நாட்டுக்கு எதிரா ‘சக்கர வியூகம்‘ வகுத்து, இந்தியாவை சுற்றி வளைச்சு நிக்குது.

அப்பத்தான் உலகமே அதிரும்படியா ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அந்த காலகட்டத்துல, அமெரிக்காவை நடுநடுங்க வைக்க, சோவியத் யூனியன் அதிபர் லியோனிட் பிரஷ்னேவ், வலதுகாலை எடுத்துவெச்சு இந்தியாவுக்கு ஆதரவா போர்களத்தில களமிறங்குனாரு.

பாகிஸ்தானுக்கு ஆதரவா நிக்குற அத்தனை நாடுகளையும், “இந்தியா மேல சிறு துரும்புபட்டாலும், நேரடியா உங்க நாடுகளை தாக்குவோம்“ ன்னு நேரடியாகவே எச்சரித்தார்.

கொஞ்சம் துள்ளிப் பார்த்த சீனாவை, “விலகிக்கோ… இல்லேன்னா உன்னோட ‘சிங்கியாங்க்‘ (சீனாவோட மிகமுக்கியமான ராணுவதளம் உள்ள பகுதி) பகுதியை தவிடு பொடியாக்குவோம்“ ன்னு, நேரடியா முறைத்தார்.

வேற எந்த நாட்டையும்விட, சோவியத்தோட ராணுவ பலத்தைப்பத்தி நல்லாவே தெரிஞ்சு வெச்சிருக்குற சீனா, வம்பு வேண்டாம்னு போர்களத்தை விட்டு விலகிடுச்சு.

அதுவரைக்கும் தனியாவே போராடின இந்தியா… சோவியத் யூனியன் துணைக்கு வந்த உற்சாகத்துல, பாகிஸ்தானோட பல பகுதிகளுக்குள்ள நேரடியா பூந்து தரை மட்டமாக்குச்சு. சோவியத் யூனியன் அதிபர் லியோனிட் பிரஷ்னேவ், தான் சொன்னதோட மட்டுமில்லாம, அதுவரைக்கும் உலகத்துக்கு காட்டாத தன்னோட நவீன போர்விமானங்கள், விமானம்தாங்கி போர்கப்பல்களை வங்காள விரிகுடாவுல இறக்கிட்டாரு.

முக்கியமா… போர்களத்துலிருந்து அமெரிக்கா, பிரிட்டனை பின் வாங்கச்செய்ய, தன்னோட அணுநீர்மூழ்கி கப்பல்களை கொண்டுவந்து வங்காள விரிகுடாவுல, ஓப்பனா நிப்பாட்டுனாரு.

இந்தியாவுக்கு ஆதரவா… வங்காள விரிகுடாவுல அவ்ளோ பெரிய அரண் அமைத்து நிக்குற, சோவியத்தோட அணு நீர்மூழ்கிக் கப்பல்களை பார்த்த அமெரிக்க கப்பற்படை மிரண்டது. உடனடியா பிரிட்டனோட HMS Eagle-ஐ போர் களத்துலிருந்து மடைமாத்தி… மடகாஸ்கருக்கு அனுப்பிட்டாங்க.

இப்படியே அமெரிக்கா உட்பட, பாகிஸ்தானுக்கு ஆதரவான ஒவ்வொரு நாடும் போர் களத்திலிருந்து பின்வாங்கி வெளியேறிடுச்சு.

பாகிஸ்தான்£ல, தனியா இந்தியாவை சமாளிக்க முடியாமல்… 13-நாள் நடந்த போர் முடிவுக்கு வந்து, பாகிஸ்தான் தன் 90 ஆயிரம் ராணுவ வீரர்களோட, இந்தியாகிட்ட சரணடைஞ்சது.

பங்களாதேஷ் என்ற புதிய தேசம் இந்தியாவின் தயவில் மலர்ந்தது.

நம்மளோட மோசமான காலகட்டத்தில், நமக்கு துணையா நின்ன ஒரேநாடு சோவியத் யூனியன் மட்டும் தான்.

அன்றைக்கு சோவியத் யூனியன் என்ற நாடு மட்டும் இந்தியாவிற்கு ஆதரவான நிலையை எடுத்து, மேற்குலக நாடுகளை இந்தியப் பெருங்கடலை விட்டு விரட்டி அடிக்காமல் இருந்திருந்தால், இந்தியா என்ற தேசம், மேற்குலக நாடுகளால் சூறையாடப்பட்டு இன்னுமொரு சோமாலியா, எத்தியோபியா போல பஞ்சை பராரி ஏழை நாடாக மாறி இருக்கும்.

அதனாலதான் இன்னைக்கு வரைக்கும் ரஷ்யாவை, இந்தியாவின் உற்ற நண்பன்னு சொல்றோம். ரஷ்யாவிற்கு ஆதரவாக அதன்பின் நிற்பது என்பது நட்பின் வெளிப்பாடு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியனின் நன்றி உணர்ச்சியின் வெளிப்பாடு…

1964-ம் முதல் 1982-ம் ஆண்டு வரை சோவியத் யூனியன் அதிபராக இருந்த லியோனிட் பிரஷ்னேவ்பதவியில் இருந்த போதே காலமானார். அப்போது இந்தியா முழுவதும் 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரித்து, நாம் நமது நன்றி உணர்ச்சியை வெளிக்காட்டினோம்.

1998-99ல் அணுகுண்டு பரிசோதனையை இந்தியா நடத்திய போது, மேற்கத்திய வல்லரசு நாடுகளுடன் சேர்ந்து, இந்தியா மீது பொருளாதார தடைகளை விதித்து கோதுமை, சமையல் எண்ணெய் போன்ற ஏற்றுமதி பொருள்களுக்கு தடை விதித்தது உக்ரேன்.

மேலும் இன்று வரை பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஐ நா மன்றத்தில் செயல்பட்டு வருகிறது உக்ரேன். பாகிஸ்தான்க்கு சலுகை விலையில் ராணுவ தளவாடங்கள், பீரங்கிகள் போன்றவற்றை இன்றுவரை விற்பதும் உக்ரேன் தான்.

இப்போது சொல்லுங்கள்… போர் எதிர்ப்பு என்ற பெயரில் நாம் உக்ரைனுக்கு ஆதரவாக நிற்க வேண்டுமா?

ரஷ்யா பின்னால் நிற்கவேண்டுமா?

பிரியமுடன்
பத்மினி ரவிச்சந்திரன்