பாகிஸ்தானின் தீவிரவாதம்

இந்தியா சுதந்திரம் அடைய சில மணி நேரம் முன்பு பாகிஸ் தான் சுதந்திரம் பெற்றது. ஆனால் பாகிஸ்தான் என்ற நாடே இந்தியா அல்லது இந்துக்களின் எதிர்ப்பை மையமாக வைத்து ஏற்படுத்தப்பட்ட ஒரு நாடு.
தனக்கு என்ற ஒரு கொள்கையோ அல்லது முன்னெடுப்போ இல்லாமல், அது இந்தியாவை எதிரியாக நினைத்து இந்தியாவின் கொள்கைகளுக்கு எதிராகவே அதன் Vision, Mission எல்லாம் இருந்தது. அதன் உருவாக்கமே இந்து மதத்திற்கு எதிரானது. அவர்களது ஒரே குறிக்கோள் இந்தியாவை கைப்பற்றி இஸ்லாமிய மயமாக்குவது.
பாகிஸ்தானின் ஏற்றுமதியே தீவிரவாதம் என்றால் ,, அங்கே கொள்முதல் இந்திய எதிர்ப்பு.. அங்கு மக்களே தீவிரவாதிகளாக தான் இருக்கிறார்கள்.

இந்தியா

ஆனால் அதே ஆண்டில் சுதந்திரம் அடைந்த இந்தியா சட்டிலைட், ராணுவம், பொருளாதாரம் என்று எங்கேயோ போய் விட்டது, இன்று இந்தியாவை உலகமே மதிக்கிறது, காரணம் இந்தியாவின் அமைதியான மக்கள் முன்னேற துடிக்கும் இளைஞர் கள் ஆனால் பாகிஸ்தான் இன்னும் தீவிரவாதிகளின் கூடாரமாக திகழ்கிறது. எந்த முன்னேற்றமும் இல்லை. உலகம் பாகிஸ்தானை தீவிரவாதத்தின் கூடாரமாகவே பார்ககிறது. இன்னும் எளிதாக சொல்ல போனால் திமுக என்ற கட்சியை எதிர்க்க ஒரு கட்சியாக அதிமுக உருவாகியதுபோல பிரிவினை பாகிஸ்தான் நாடு முஸ்லிம்களுக்கு என பிரிக்கப்பட்ட போது அந்த நாட்டில் கிட்டத்தட்ட 36% இந்துக்கள் குடியிருந்தார்கள்.

இந்து மதம் என்பது இந்தியாவில் தோன்றிய மதம் என்று சொல்லுவார்கள்! அது ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்கா வரை உலகம் முழுவதும் இருந்தது. அந்த வாழ்க்கை முறையை பின்பற்று பவர்கள் பின்னாளில் தோன்றிய மதங்களில் இருந்து வேறுபடுத்தபட்டன. அதனால் அதன் ஆதிக்கம் குறைந்தது மற்ற மதங்கள் மனிதரால் தோற்றுவிக்கப் பட்டது, இந்து என்பது தெய்வங்களால் தோன்றியது என்பது வரலாறு.. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வாழ்க்கை முறை இது.

இந்துக்களின் கதி!

பாகிஸ்தான் தோற்றுவிக்கப் பட்டபோது அங்கிருந்து 13% இந்துக்கள் விரடப்பட்டு இந்தியாவில் குடியேறினர் அல்லது கொல்லப்பட்டனர். மீதி 23% இந்துக்கள் அங்கேயே தங்கி விட்டனர். 23% ஆக இருந்த இந்துக்கள் பல கொடுமைகளால் மதம் மாற்றப்பட்டு, அல்லது கொல்லப்பட்டு இன்று வெறும் 1% மட்டுமே மீதி உள்ளனர். ஆனால் அவர்களுக்கு என்ற பாகிஸ்தான் சட்டத்தில் எந்த அடிப்படை உரிமையும் இல்லை. உதாரணமாக ஒரு ஒருவன் இந்து முறைப்படி கல்யாணம் செய்தால் அது செல்லாது. கல்யாணம் செய்ய வேண்டும் எனில் முஸ்லிம் முறைப்படி அங்கு கல்யாணம் செய்தால் மட்டுமே அது சாத்தியப்படும். இப்படி பாகிஸ்தான் தனக்கு என ஒரு முஸ்லிம் விதி முறையை உண்டு பண்ணி அருகில் இருந்த சிறு ராஜ்யங்களை தன்னோடு சேர்த்தது.

மேற்கு பஞ்சாப்

இதில் மேற்கு பஞ்சாப் என்ற பகுதி சிந்து நதிகளால் வளம் பெற்ற முக்கியமான பகுதி. அதை அடுத்து சிந்துநதியின் அரபிக்கடல் முகப்பில் உள்ள கராச்சியை சுற்றிய பகுதி. இதில் பஞ்சாபியர்கள் தன்னிச்சையாக அரசிலும், அதன் ராணுவத்திலும் இன்றும் கோலோச்சுகிறார்கள். அவர்கள் தனக்கென சட்டங்களை இயற்றிய போது மற்ற பகுதி களுக்கு அடிப்படை உரிமையை கூட கொடுக்கவில்லை. தனக்கு சுதந்திரம் கேட்டு போராடி வருகிறது.

பலுசிஸ்தான்

மேற்கில் ஈரானை ஒட்டியுள்ள பகுதிகள் பலுசிஸ்தான் என்ற ஒரு பெரிய பகுதி. அவர்களுக்கு எந்த நதியும் இல்லாததால் வறுமை என்பது அவர்களுக்கு என்றும் இருக்கும் வியாதி. ஆனால் கடுமையான உழைப்பாளிகள், அவர்கள் ஆளும் பஞ்சாபி பாகிஸ்தானியர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த பலுசிஸ்தானின் ஒரு பகுதியை ஈரான் தன்னுடையது என்று இன்றும் சொந்தம் கொண்டாடுவதால், பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் பெரும் பகை. அது இல்லாமல் ஷியா முஸ்லிம்களுக்கும், பாகிஸ்தானின் சன்னி முஸ்லிம்களுக்கும் ஏழாம் பொருத்தம். இதனால் பலுசிஸ்தான் தனக்கு சுதந்திரம் கேட்டு போராடி வருகிறது. இது இந்தியாவின் ஆதரவையும் கோரி வருகிறது. இந்தியாவின் ஸிகிகீ, ஈரான் இவர்களுக்கு உதவுவதாக பாக் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டுகிறது.

பெஷாவர்

அடுத்து பெஷாவர் எனும் ஆப்கனியர்கள் பகுதி என்று சொல்லப்படும் பகுதி. இதில் ஒரு பகுதியை ஆஃப்கன், பாக் இருவரும் சொந்தம் கொண்டாட, பெஷாவர் மக்கள் தனி நாடு கோரி போராடுகிறார்கள். இவர்களுக்கும் இந்தியா உதவுகிறது. என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது

காஷ்மீரின் கில்கித், ஸ்கர்ட்

அடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் கில்கித், ஸ்கர்ட் என்ற இரு பகுதிகள். இன்னும் தனி நாடாகவே உள்ளது. இதற்கு என தனியாக பிரதமரே உள்ளார். இந்த பகுதியை இந்தியா

விரைவில் தன்னுடன் சேர்த்து விடும், எனவே தற்போதைய பிரதமர், நான்தான் Pok கின் கடைசி பிரதமர் என வெளிப்படையாகவே பேசி வருகிறார். ஏனெனில் இந்திய படைகள் ஊடுறுவல் அதிகமாக உள்ளது, ஆனால் பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறது. இந்திய விமானப்படைகள் பாகிஸ்தானின் பகுதியிலேயே புகுந்து தாக்கிய போதும், அதனால் எதுவும் செய்ய முடியவில்லை.அதுமட்டுமல்ல பாகிஸ்தானில் உள்ள ரேடார்கள் மற்றும் பாதுகாப்பு அறன்களாக சொல்லப்படும் கருவிகள் மிக பழைய டெக்னாலஜி. மேலும் பல வேலை செய்வதில்லை அதனால் அது பயணிகள் விமானத்தையும், போர் விமானத்தையும் பிரித்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அதன் தரம் உள்ளது. இதே தரத்தில், அளவில் ஈரான் நாடும் இருந்ததால் அது பயணியர் விமானத்தை தெரியாமல் சுட்டு வீழ்த்தியது. அது நடக்காமல் இருக்கவே பாகிஸ்தான் தன் வான் எல்லையை மூடியது.
பாகிஸ்தானில் பஞ்சாபியரின் அடக்குமுறை என்பது அவர்கள் செல்வந்தர்கள், மற்றும் அதிக மக்கள் என்பதால் அந்த டாமினேசன் தொடர்கிறது. ஆனால் பாகிஸ்தான் தனக்கென ஸ்திரமான கொள்கையோ, அரசோ இல்லாமல், ராணுவத்தின் மூலமே கட்டுப்படுத்தப்பட்டது. அது தவறான வழிகளான இந்திய ரூபாய் நோட்டுக்களை கள்ள தனமாக அடித்தல், போதை மருந்து, ஆயுதம் கடத்தல், தீவிரவாதிகளை வளர்க்க மற்ற நாடுகள் கொடுத்த பணம், ஆஃப்கன் போருக்காக அமெரிக்கா கொடுத்த பணம் எல்லாமே நேரடியாக இராணுவம் பெற்றதால் அது தன்னிச்சையாக பாகிஸ்தானை ஆள்கிறது. அதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் எந்த பெரிய அரசு அதிகாரமோ, சுதந்திரமோ இல்லை.

பணம் இன்றி தவிக்கும் பாகிஸ்தான்

அப்படி தவறான வழிகளில் சம்பாதித்த பாகிஸ்தான், இந்தியாவின் Demonetization க்கு பின் இந்திய ரூபாய்களை அச்சடிக்கும் வாய்ப்பு பறி போனதிலும் அதற்கு மிக பெரிய இழப்பு.அதனால் அதன் பொருளாதாரம் கடனுக்கு மேல் கடன் வாங்கியதால், அதன் செலவுகளில் பெரும் பகுதி வட்டி கட்டுவதிலேயே போய் விடுகிறது. 2008 ல் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி 1.7% ஆகவும், அதன் பணவீக்கம் 16% ஆகவும் இருந்தது. அதன் பிறகு கடந்த 12 ஆண்டுகளில் அதன் வளர்ச்சி 1.3% ஆகவும் , பணவீக்கம் 18% மேலேயும் உள்ளது. அப்படி இருந்தும் அந்த அரசு தப்பி பிழைத்ததற்கு காரணம் தவறான வழிகளில வீறீறீமீரீணீறீ ஆக சம்பாதித்ததில் மட்டுமே!
இந்தியாவின் Demonetizationபோன்ற காய் நகர்த்தலால் தனிமை படுத்தப்பட்டு இன்று தன் அரசு ஊழியர்களுக்கு கூட சம்பளம் கொடுக்கவே பணம் இல்லாமல் தவிக்கிறது. இதற்கு முன்பு அமெரிக்காவின் ஆஃப்கன் தீவிர வாத எதிர்ப்பு போருக்கு என்று அமெரிக்காவிடம் இருந்து பெற்று வந்த உதவியும் கடனும், கிட்டத்தட்ட நின்றே விட்டது. மற்ற நாடுகள் கொடுத்த பணம் என்பது பெரியதாக இருந்தது, அதுவும் இந்தியாவின் தலையீட்டாலும், இந்தியா இப்போது காஷ்மீரை தன்னோடு இணைத்து கொண்டதால் அதுவும் குறைந்து விட்டது.

இந்திய ரூபாய் நோட்டுக்களை கள்ள தனமாக அடித்தல், போதை மருந்து, ஆயுதம் கடத்தல், தீவிரவாதிகளை வளர்க்க மற்ற நாடுகள் கொடுத்த பணம், ஆஃப்கன் போருக்காக அமெரிக்கா கொடுத்த பணம் எல்லாமே நேரடியாக இராணுவம் பெற்றதால் அது தன்னிச்சையாக பாகிஸ்தானை ஆள்கிறது. அதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் எந்த பெரிய அரசு அதிகாரமோ, சுதந்திரமோ இல்லை.

விவசாயம்

முக்கிய வருமானம் என்பது விவசாயத்தில் இருந்தே 26% வருமானம் வருகிறது. அதற்கு இந்தியாவின் இமயமலையில் தோன்றும் 5 நதிகளில் இருந்து வரும் நீரே அதற்கு அடிப்படை ஆதாரம். அதில் பாகிஸ்தானுக்கு 60% என்பதும் இந்தியாவிற்கு 40% என்பதும் ஒத்து கொண்ட தண்ணீர் பாகப் பிரிவினை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியா அதில் தன் பகுதியை இதுவரை அந்த 40% பயன்படுத் தாததால் முழு நீரையும் பாகிஸ்தானே பயன்படுத்தியது. தற்போதைய பயன்பாட்டிலேயே கராச்சிக்கு நீர் கிடைப்பதில்லை. இப்போது இந்திய அரசு தனது 40% சிந்து நீரை பயன்படுத்த போகிறோம் என்று அணைகளை கட்டி வருகிறது. அப்போது பாகிஸ்தானின் விவசாயமும் பெருத்த நஷ்டத்தில் முடிவடையும்.

போட்டியால் நஷ்டம்

முக்கியமானது இந்திய ராணுவத்துடன் போட்டி போட்டு அதன் ராணுவத்திற்கு செய்து வந்த செல்வுகள் அதற்கு தீராத தலைவலி. தான் வாங்கிய அந்த போர் தளவாடங்களை பராமரிக்கவும், அதற்கு தளவாடங்கள் உபரி பொருள் வாங்கவும் கூட நிதி இல்லை. அப்படி இருக்க அதன் நலிவுற்ற பொருளாதாரத்தை நம்பி உதவிய நாடுகள் Bankrup ஆக போகும் நிலையில் உதவிகளை குறைத்து விட்டது, அல்லது நிறுத்தி விட்டது. அதற்கு மேல் உதவுபவர்களிடம், நிறுத்த சொல்லி இந்தியாவும் வற்புறுத்துகிறது. ஆதரிப்பதை நிறுத்தா விட்டால் இந்தியா அந்த நாடுகளிடன் தன் வர்த்தகத்தை குறைத்து விட்டது. உதாரணம் மலேசிய பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவு கொடுத்ததால் பாமாயில் இருக்குமதியை குறைத் ததால் அதன் பொருளாதாரத்தில் பெரும் அடி.
அதை தவிர்த்து இந்தியாவின் பலமான வெளியுறவு கொள்கை உலக நாடுகள் அதன் பின்னே நிற்பதால், அடிப்படை வசதி, உணவு இல்லாத பாகிஸ்தான் இன்னும் சில மாதங்களுக்குள் பெரும் உள்நாட்டு கலகங்கள் தோன்றும் என எதிர்பார்க்கபடுகிறது

காத்திருக்கும் இந்தியா

அப்படி ஓன்று நடந்தால், இதுவரை காத்து கொண்டு இருக்கின்ற பலுசிஸ்தான், பெஷாவர் தன் போராட்டத்தை மேலும் அதிகரிக்கும். அதற்கு இந்தியா, ஈரான், ஆஃப்கன் எல்லாம் உதவுகிறது. அப்போது பாகிஸ்தான் இந்திய எல்லை ஓரம் நிறுத்தி இருக்கும் அதன் படைகளை வடமேற்கில் நகர்த்தி யாக வேண்டும். அப்போது இந்தியா Pok என்ற பகுதியை தன்னுடன் எளிதில் சேர்த்து விட காத்திருக்கிறது. இப்படி பாகிஸ்தான் இதன் மூலம் சிறு நாடுகளாக உடையும்.
இதற்கு மூலகாரணம் அதன் இந்தியாவிற்கு எதிரான தீய எண்ணங்கள் மட்டுமல்ல, இன்று உலகில் தீவிரவாதிகளுக்கு எதிராக அணி திரளும் நாடுகளும் அதன் எதிரியாக மாறியதும் முக்கியமான காரணம். அதன் விளைவு தான் காஷ்மீரை இந்தியா 370 விலக்கி சேர்த்து கொண்டபோது ஒவ்வொரு நாடுகளிடமும் கெஞ்சிய போது யாருமே செவி கொடுத்து கூட கேட்க வில்லை.
மேலும் அதன் பொருளாதாரம் மோசமாக இருக்கும் இந்த நிலையில் இந்திய ராணுவம் வேண்டும் என்றே சிறு சிறு போர் உரசல்களை எல்லையில் அடிக்கடி செய்து அது தன் ராணு வத்தை இங்கும் அங்கும் நகர்த்தும் படி செய்கிறது இதனால் அது மேலும் பெரும் செல வினங்களை கொடுத்து அதன் ராணுவத்தின் பொருளாதாரத்தை சீரழிக்கிறது இந்தியா.. அது மட்டும் அல்ல மேலும் நிறைய வழிகளில் பாகிஸ்தானுக்கு எவ்வளவு செலவை கொடுக்க முடியுமோ அவ்வளவு வேலையையும் இந்தியா செய்கிறது இதனால் பாகிஸ்தான் பொருளாதாரம் தலைகீழாக போய் கொண்டு இருக்கிறது இந்த நிலையில் இன்னும் கொஞ்ச காலங்களில் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயரும் காய்கறி பால் அத்தியாவசிய பொருள்கள் விலை கூடும், மேலும் அரிசி விலை எட்டாத உயரத்திற்கு போகும் இதனால் மக்களிடையே கொந்தளிப்பு உண்டாகும் இதுவே இந்தியாவின் வெற்றிக்கும், பாகிஸ்தான் பலுசிஸ்தான், பெஷாவர், சிந்து என்று சிறு சிறு நாடுகளாக உடைவதற்கும் காரணமாகும்.

இந்தியாவில் அடுத்த தேர்தலுக்கு (2024) முன்பு Pok காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

சீனா, Pok வில் பெரும் முதலீடு செய் துள்ளது, இந்தியா அதனை தன்னுடன் சேர்த்த பின்னும் அதன் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க ஒத்துக்கொண்டால் சீனா Bankrupt ஆகப்போகும் பாகிஸ்தானின் பக்கம் சாயமுடியாமல் இந்தியா பக்கமே சாயவேண் டிய கட்டாயத்தில் உள்ளது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் 5G முதலீடுகள் முதல் பெரு மளவில் முதலீடுகளை செய்தபின், அது தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது.
அதை தவிர QUAD என்ற நான்கு நாடுகள் (அமெரிக்கா, ஆஸ்திரேலிய, ஜப்பான், இந்தியா) கூட்டு நாடுகளும், தென் சீன கடலில் இந்தியாவின் ஆளுமையும் சீனாவை அதன் குரல்வலையில் கைவத்த நிலையில் அது இன்று தடுமாறுகிறது. அதன் முக்கிய சமீப கால மாற்ற மான அருணாசல பிரதேசதின் உரிமைமீது கொண்ட மாற்றம். அனுமானமும் யூகங்களும் சரியானால், இந்தியாவில் அடுத்த தேர்தலுக்கு (2024) முன்பு POK காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருக்கும். பாகிஸ்தானும் சிறு நாடுகளாக துண்டாடப்பட்டுவிடும். வினை விதைத் தவன் வினை அறுப்பான்!

பாகிஸ்தான் தான் 70 ஆண்டுகளாக விதைத்த வினையினை அறுவடை செய்யும் நேரமிது! காலம் கை கூடும் வரை பொறுத்திறுப்போம்.