Friday, April 19, 2024

சூர்யாவின் சுயநலமான கேள்விகள்...

TT

உடம்பு சரியில்லாதவர்கள் டாக்டரிடம் போகாமல் இஞ்சினியரிடம் போவது எவ்வளவு முட்டாள்தனமானதோ அதைவிட அதிக முட்டாள்தனமானது கல்விக் கொள்கைப் பற்றி சினிமாக்காரர் போன்றோர் சொல்லுவதைக் கேட்பது.
அந்த சினிமாக்காரரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார் – வரைவு கல்விக் கொள்கையை அவர் படித்துவிட்டுப் பேசவில்லையாம்; சிலர் அவருக்குச் சொல்லியதைக் கேட்டுவிட்டுப் பேசுகிறாராம்!
யார் அந்த சிலர்? நாடு வளர்வதைக் கொஞ்சங்கூட விரும்பாத சில போராளி(?) கும்பல், திட்டமிட்டுப் பல சூழ்ச்சிகளைச் செய்து வருகிறது. அவர்கள் பரப்பும் விஷக்கிருமிகளை சினிமாக்காரர்களை வைத்தும் பரப்புகிறார்கள். அந்தக் கும்பலின் சூழ்ச்சியில் சில சினிமாக்காரர்கள் சிக்கிக்கொள்கிறார்கள்; சிலர் தெரிந்தே உடன்படுகிறார்கள், தங்களின் சுயநலத்திற்காக.

 

‘நான் பேசினால் அது நிறைய மக்களிடம் போய் சேரும் என்பதால் பேசுகிறேன்’ என்று சொல்லும் நடிகர் சூர்யா, சில மணி நேரம் செலவு செய்து அந்த வரைவு அறிக்கையைப் படித்துப் பார்த்திருக்க வேண்டாமா? மக்கள் நலனில் அக்கறை இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் சூர்யா, அந்த மக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் கல்விக் கொள்கையைப் படித்துப் பார்க்க ஒரு சில மணி நேரம் கூட செலவழிக்க விரும்பவில்லையா?

17, 18 வயது கொண்ட பிஞ்சு மாணவ, மாணவிகள் முன் பேசுகிறோம் எனும் குறைந்தபட்சப் பொறுப்புணர்வு கூட இல்லாமல் கெட்ட வார்த்தையெல்லாம் பேசும் சூர்யாவா சமூக நலன் பற்றியும் மாணவர் நலன் பற்றியும் பாடமெடுப்பது?

சினிமாக்காரர்களும், so Called போராளிகளும் மக்கள் உணர்ச்சிவசப்படும் அளவுக்குக் குரலை உயர்த்திப் பேசி, இல்லாதப் பொல்லாத விஷயங்களை எல்லாம் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள். அதற்கு ஊடகங்கள் வெளிச்சம் கொடுத்துவிடுகிறார்கள். அதன் விளைவாக, பொய்யான விஷயங்களை உண்மை என்று நம்பிவிடுறார்கள் மக்கள்.

உண்மையைக் கொண்டு செல்வதற்குத் தான் தொடர் முயற்சியும் கடின உழைப்பும் தேவைப்படுகிறது…

இப்போது சூர்யா சொன்ன சில பொய்களுக்கு மட்டும் இங்கே உண்மையைச் சொல்லுகிறேன்.

புதிய (வரைவு) கல்விக் கொள்கை, மாணவர்கள் கம்மியாக இருக்கக்கூடிய பள்ளிக்கூடங்களை மூடிவிடச் சொல்லுவதாக சொல்லுகிறார் சூர்யா. அது முற்றிலும் தவறு. புதிய கல்விக் கொள்கையில் அப்படி எங்கேயும் சொல்லப்படவில்லை. 3ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்புகளில் எல்லாம் நடத்தப்படும் தேர்வு களைக் கடுமையாக விமர்சிக்கிறார் சூர்யா.

அந்தத் தேர்வுகள் எல்லாம் Pass / Fail தேர்வுகள் அல்ல; மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை அறிந்துகொள்ள உதவும் தேர்வுகள் மட்டுமே. அவை மாணவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது, மாறாக அவர்களின் வளர்ச்சிக்கு உதவும்.

மாணவர்களின் இடை நிற்றல் (Drop Outs) பற்றி பேசுகிறார். இடை நிற்றலைக் குறைக்கத் தொடர்ந்து பல முயற்சிகள் மத்திய, மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உயர் கல்வியில் அதிகப்படியான மாணவர்களைச் சேர்க்கவும் பல்வேறு தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகிறது. ஆராய்ச்சியை மேம்படுத்தப் பொருளாதார உதவிகளும் பெருமளவு வாரி வழங்கப்பட்டு வருகிறது. உண்மைத் தெரியாமல் பேசக் கூடாது.

நீட் தேர்வைப் பற்றி பேசும்போது அவ்வளவு ஆவேசமாகப் பேசும் சூர்யா, தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகள் அடித்துவந்தக் கொள்ளையைப் பற்றி மட்டும் ஏன் பேச மறுக்கிறார்? எது அவரைப் பேசத் தடுக்கிறது?

எல்லாவற்றிற்கும் மேலாக, மாணவர்களும் பெற்றோர்களும் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையைத் தயாரித்தக் குழுவின் தலைவர், அமெரிக்காவின் மிகச் சிறந்த விஞ்ஞான அமைப்பான NASAவுக்கு இணையான நம் பாரத நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISROவின் முன்னாள் தலைவரும் உலகறிந்த விஞ்ஞானியுமான டாக்டர் கஸ்தூரிரங்கன் (இந்த ISROவில் நமது அப்துல் கலாம் ஐயா பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது). அவரைப் போலவே, Princeton Universityயின் பேராசிரியர், Jawaharlal Nehru University யின் பேராசிரியர் உள்ளிட்ட பல உண்மையானக் கல்வியாளர்களைக் கொண்டு மிகவும் அக்கறையோடு தயாரிக்கப்பட்டது இந்தக் கல்விக் கொள்கை.

 
neet

யார் அறிவாளிகள்? நாடறிந்த விஞ்ஞானி கஸ்தூரி ரங்கனா, நடிகர் சூர்யாவா? பல்கலைக்கழகத் துணை வேந்தரா, படிக்காமல் பேசும் சூர்யாவா?

 

நாம் யார் சொல்லுவதைக் கேட்கப் போகிறோம் என்பதைப் பொறுத்துத் தான் நமது இளந்தலை முறையினரின் எதிர்காலம் இருக்கிறது. யோசித்து முடிவெடுங்கள்.

 

சூர்யாவின் பத்து கேள்விகள்

சூர்யாவின் கேள்விகளை பார்க்கும் போது அவர் இந்தியாவில்தான் இதுவரை இருந்தாரா இல்லை தற்போதுதான் இந்தியாவிற்கு வந்திருக்கிறாரா என்றுதான் கேட்க தோன்றுகிறது. மேலும் இவர் நம்முடைய கல்வி முறைகளை பற்றி இதுவரை குறைந்தபட்ச அறிவு கூட இல்லாதவராக இருப்பதாகவே தொன்றுகிறது

முப்பது கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர் மானிக்கும் கல்வி கொள்கையை தீர்மானிக்கும் கல்வி கொள்கையில் அவசரம் ஏன்?

 

பதில் : இந்த கல்வி கொள்கை 2015 ம் ஆண்டு முதலே விவாதத்தில் இருக்கிறது. இதற்கு சிறந்த கல்வியாளர்கள் நிறைந்த கமிட்டி அமைக்கப்பட்டு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்கள்‘, ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு அவர்கள் தங்கள் அறிக்கைகளை சமர்பித்து பின்னர் ஆய்ந்து எடுக்கப்பட்ட சரியான முடிவு. சில தினங்களுக்கு முன்பு தமிழ் கல்வி நிறுவனங்களின் குழு கொடுத்த பேட்டியை பாருங்கள். மேலும் அப்துல்கலாம் அவர்களின் உதவியாளர் பொன்ராஜ் அவர்களின் அத்தனை கோரிக்கையும் அபப்டியே ஏற்கப்பட்டுள்ளது. இதுவே தாமதம்தான். இதை தாமதப்படுத்துவதுதான் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுவதாகும்.

மூன்று வயது குழந்தையால் மூன்று மொழி படிக்க முடியுமா?

5 வயதிற்குள் மொழிகளை கற்கும் திறன் அதிகம்.

பதில் : உங்கள் குழந்தை மூன்று வயதில் தனியார் பள்ளியில் மூன்று மொழி படிக்கும் போது மற்ற குழந்தைகள் படிக்காதா சூர்யா அவர்களே? உங்கள் மனைவியே பேட்டி கொடுத்திருக்கிறாரே சூர்யா. உங்கள் குழந்தையை ஏன் இந்தி கட்டாயமாக இருக்கும் தனியார் சி.பி.எஸ்.இ பாடத்திட்ட பள்ளியில் சேர்த்து கஷ்டப்படுத்தினீர்கள்? ஏன் ஒரு கஷ்டப்படாத அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கவில்லை?

 

நாட்டில் 1848 பள்ளிகள் மூடப்பட இருக்கிறதே அதற்கு பதில் என்ன ?

பதில் : அதுதான் எங்கள் கேள்வியும். எந்த புதுமையையும் மக்கள் எதிர்பார்க்கும் எந்த தரத்தையும் அரசு பள்ளிகளில் புகுத்த விடமாட்டீர்கள் உங்களை போன்ற திடீர் போராளிகள். எனவே அந்த பள்ளிகளில் யாரும் தங்கள் பிள்ளைகளை சேர்க்கமாட்டார்கள். ஆனால் ஆசிரியர்களுக்கு வருடா வருடம் அதிக சம்பள உயர்வு கொடுத்தே ஆக வேண்டும். இல்லையென்றால் அதற்கும் இன்னொரு கூட்டம் போராடும். அப்புறம் பள்ளிகளை எப்படி நடத்த முடியும்? இவ்வளவு நாள் மூடாமல் வைத்திருப்பதே சாதனைதான்.

 

கல்வியில் சிறந்த நாடுகளில் 8ஆம் வகுப்பு வரை தேர்வுகளே இல்லை. ஆனால் இங்கு 3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு நியாயமா?

இந்த தேர்வுகள் எவ்வளவு மதிப்பெண்கள் என்ற கணக்கு பார்க்க அல்ல. சொல்லப்போனால் வெறும் தரம் மட்டும் தான் கொடுக்கப்படும். ஆனால் இது மாணவர்களுக்கு எதில் ஆர்வம், எதிர் தேர்ச்சி என்பது தெரிய வரும்.

பதில் : பள்ளிக்கல்வியில் சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சீனாவுமே முன்னிலை வகிக்கிறது. உயர்கல்விகளில்தான் மற்ற நாடுகள் முன்னிலை. பள்ளி கல்வி தரத்தை நாம் இந்தியாவிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பராக் ஒபாமா கூறியது நினைவிருக்கிறதா? வெளிநாடுகளில் பள்ளி செல்லும் மாணவர்களின் சதவீதம் தெரியுமா சூர்யா? பள்ளியில் தேர்ச்சி விகிதம் தெரியுமா? பள்ளி முடித்து கல்லூரி செல்பவர்கள் வெளிநாடுகளில் மிக மிக குறைவு என்பது தெரியுமா?

 

மாணவர்கள் நுழைவுத்தேர்வு தகுதித்தேர்வு என்றே எழுதிக்கொண்டிருந்தால் அவர்கள் எப்போதுதான் வாழ்க்கையை கற்றுக்கொள்வது ?

பதில் : வாழ்க்கையை பள்ளியிலிருந்துதான் கற்க ஆரம்பிக்கிறார்கள். மேலும் எல்லா தேர்வுகளும் ஆண்டாண்டு காலமாக உலகெல்லாம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஏதோ திடீரென முளைத்தது அல்ல. வாழ்க்கையை முழுவதுமாக இந்த வயதில்தான் அவர்கள் கற்றுக்கொள்ள முடியும் என்று நீங்கள் நம்பினால் உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்து வாழ்க்கையை கற்றுக்கொடுக்க வேண்டியதுதானே சூர்யா?

Family Is the fundamental unit of society. சமூகத்தை சீர்திருத்த நினைத்தால் அதை உங்கள் குடும்பத்திலிருந்தே ஆரம்பியுங்கள். நீங்கள் கெட்ட வார்த்தைப் பேசாதீர்கள்; கெட்ட வார்த்தைப் பேசி நடிக்க வேண்டாம் என்று உங்கள் மனைவியிடம் சொல்லுங்கள்; செல்ஃபி எடுக்க வரும் பாமரனிடம் சீறிப் பாய வேண்டாமென உங்கள் தந்தையிடம் சொல்லுங்கள்.

 

180000 அரசு மாணவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களில் ஒரு மாணவர்தான் தேர்ச்சி.

பதில் : இப்படிப்பட்ட சற்றும் உண்மையற்ற பச்சை பொய்களை சொல்வதால்தான் சமுதாயத்தில் நீங்கள் கூத்தாடிகள் என்றும் அறிவில்லாதவர்கள் என்றும் பார்க்கப்படுகிறீர்கள். எப்படி இப்படி ஒரு முட்டாள்தனமான ஆதாரமற்ற கேள்வியை வைக்க முடிகிறது உங்களால்?

 

80 லட்சம் ஆசிரியர்கள் கொண்ட இந்தியாவில் ஒரு ஆசிரியர் அமைப்பும் ஒரு மாணவர் அமைப்பும் கல்வி கொள்கையை தீர்மானிப்பது எப்படி?

பதில் : 4000 நடிகர்கள் இருக்கும் ஒரு சங்கத்தில் எல்லா முடிவுகளையும் உங்கள் தம்பியும் விஷாலும்தானே எடுக்கிறார்கள் எப்படி சூர்யா? 130 கோடி மக்கள் இருக்கும் நாட்டில் எல்லா முடிவுகளையும் 534 எம்.பிக்களும் ஒரு பிரதமரும்தான் எடுப்பார்கள் என்றால் எப்படி சூர்யா?. 80 லட்சம் ஆசிரியர்களையும் கூப்பிட்டு கருத்து கேட்க வேண்டுமா சூர்யா? இவ்வளவு முட்டாளா நீங்கள் ? அண்ணா பெரியார் கருணாநிதியின் வரலாறுகளை பற்றி மட்டுமே படிக்க தமிழகத்தில் சமச்சீர் கல்வி புகுத்தப்பட்ட போது அந்த கமிட்டியில் எத்தனை ஆசிரியர்கள் இடம் பெற்றார்கள் தெரியுமா சூர்யா?

 

விதவிதமான கல்வி முறைகளை வைத்து கொண்டு தேர்வு மட்டும் ஒன்று என்றால் எப்படி?

பதில் : புதிய கல்வி கொள்கை என்பது வெறும் தேர்வுகளை பற்றியது மட்டுமல்ல. மொத்த கல்வி முறையை சீர்திருத்துவது. எல்லா கல்வி நிறுவனங் களிலும் ஒரே மாதிரியான நீங்கள் தரமானது என்று உங்கள் குழந்தைகளை சேர்த்திருக்கும் சி.பி.எஸ்.இ முறையை கொண்டு வர முயல்கிறோம் . நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்? எல்லா பள்ளிகளிலும் ஒரே மாதிரி பாடத்திட்டம் கொண்டுவர வேண்டுமென்ற கருத்துக்கு உங்கள் பதில் என்ன ?

 

எதிர்கால தலைமுறையின் தலையெழுத்து எழுதப்படும் நேரத்தில் நாம் இன்னும் விழிப்படையாமல் இருப்பது ஏன்?

பதில் : ஆம். உலகத்தோடு போட்டி போட்டு மிக சிறப்பாக இளைஞர்கள் தங்கள் தலையெழுத்தை எழுதிக்கொண்டிருக்கும் போது இன்னும் உலக அறிவின்றி என் பிள்ளைகள் மட்டும் நல்ல தரமான கல்வி கற்று ஆங்கிலம், இந்தி போன்ற அத்தனை மொழிகளையும் கற்க வேண்டும். ஆனால் ஏழைக் குழந்தைகள் மட்டும் சற்றும் தரமில்லாத சமச்சீர் கல்வியில் படிக்க வேண்டும் என்று நினைப்பது அறிவார்ந்த நடைமுறையா? எப்போது உங்கள் போலி வேடம் கலைத்து விழிப்படைவீர்கள் சூர்யா?