சீனாவில் அமீர்கான் படங்களின் மெகா வசூல் எப்படி?

பாகுபலி எனும் மெகா படம் 1429 கோடிகள் வசூலை இந்தியாவில் அள்ளியது. ஆனால் சீனாவில் 80 கோடிகளை தாண்டவில்லை.

ஆனால் அமீர்கானின் 15 கோடி பட்ஜெட் படமான ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ இந்தியாவில் பெயரே வெளிவராமல் காணாமல் போனாலும் சீனாவில் 900 கோடிகளை அள்ளியது.

அதே போல ‘டங்கல்’ எனும் அமீர்கான் படம் 387 கோடிகளை இந்தியாவில் அள்ளியது. ஆனால் சீனாவில் 1370 கோடிகளை அள்ளியது.

சீனாவின் தந்திரம்

அமீர்கான் மூலமாக இந்தியாவிற்குள் பணம் கொண்டு வரவே இந்த சினிமாக்களை சீன அரசு கையில் எடுத்துள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் சீனாவிலிருந்து சுமார் 1 டிரில்லியன் டாலர்கள் அதாவது 78 லட்சம் கோடி ரூபாய் பல வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எப்படி??

உதாரணமாக அமீர்கானின் படத்தை விநியோகம் செய்பவர், ‘‘உங்கள் படம் 1000 கோடிகளை தாண்டி விட்டது. இதோ உங்கள் பங்கான 300 கோடிகள் என சட்டப்படி அனுப்புவார். அதில் 100 கோடிகளை தனக்கு வைத்துக் கொண்டு, சீனா கைகாட்டும் இடங்களில் மீதம் 200 கோடிகளை செலுத்தி விடுவார் அமீர்.

சீனாவில் பணம் எங்கேயிருந்து வந்தது?? அமெரிக்காவின் பிரபல போன் கம்பெனிகள் சீனாவிற்கு உற்பத்தி செய்ய சென்ற போது, சிவப்பு கம்பளம் விரித்த சீன, மிக விரைவில் அவர்களின் மொத்த மிறி ரகசியங்களை திருடியது.

சீன போன்கள் & Xiomi, VIVO,OPPO…

மலிவு விலையில் நவீன போன்களின் வசதியோடு, சீனாவின் போன்கள் இந்தியாவில் கொடி கட்டி பறக்கின்றன. சுமார் 24% மார்கெட்டை சீன போன்கள் பிடித்துக் கொண்டுள்ளன….

மேலும் பல பொய்யான கம்பெனிகளை உருவாக்கி அங்கு பணம் அனுப்பி, வாபத்தை குறைத்து இந்திய அரசுக்கு சேர வேண்டிய வரியை கட்டாமல் ஏமாற்றுகிறது சீன அரசு.

  1. 25 லட்சம் கோடிகளை இந்தியாவில் தொலைபேசியின் வாயிலாக பெறும் சீனா 62,000 கோடிகளை எடுத்து செல்கிறது. அதில் தான் இந்த அமீர்கான் போன்றவர்களுக்கு பிச்சைகாசாக 250 கோடிகளை எறிந்து விட்டு செல்கிறது.
  2. என்ன லாபம்?
  3. அமீர்கான் கிடைக்கும் பணத்தில் தனக்கானதை எடுத்துக் கொண்டு மீதமுள்ள பணத்தை யாருக்கு கொடுப்பார்??
    கம்யூனிஸ் கட்சி தலைவர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர் எனும் போர்வையில் பதுங்கியிருக்கும் தேசவிரோதிகள், மீடியா, அரசியல் தலைவர்கள், மதவாதிகள், உள்ளு£ர் தாதாக்கள் என பலருக்கு இந்த பணம் தரப்படுகிறது.
    எதற்காக??
    தன்னிடம் மிறி திருடிய சீனாவிடம் சண்டைபோட்டு அமெரிக்க கர்நாடகாவில் மிகப்பெரிய ‘ஐ போன்’ (ஆப்பிள் போன்) உற்பத்தி தொழிற்சாலையை திறந்தது. சமயத்திற்கு காத்திருந்த சீனா தனது கைக் கூலிகளை விட்டு ஒரு சின்ன உப்பு சப்பு இல்லாத விஷயத்திற்காக யூனியன் சண்டையை கிளப்பி, தொழிற்சாலையை அடித்து நொறுக்கி, எரித்து, பல கோடி மதிப்புள்ள போன்களை சூரையாடினர்.
  • ஆப்பிள் இனி இந்தியாவில் கால் வைக்குமா?? யார் இந்த அக்கிரமம் செய்தது?? கம்யூனிஸ் தலைவரும் காங்கிரஸ் தலைவர்களும் தான்!! சீனா வில்லத்தனமாக சிரிக்கிறது.
  • அதேபோல தூத்துக்குடி ‘ஸ்டெரிலைட்’ தொழிற்சாலை நமது இப்போதைய சட்டங்களும் நீதித்துறையும் அந்நிய சதிகளின் அதீத சக்திகளை தாங்க முடியாமல் ஜனநாயகம் எனும் வலையில் முடங்கியுள்ளது.
  • லால் சட்டா எனும் அமீர்கான் படம் இங்கே மெகா வெற்றி பெறாமல் இருக்கலாம்… ஆனால் சீனாவின் ஆயிரம் கோடிகளை குவிக்க போகிறது நிஜம்.