Friday, March 29, 2024

மத வன்முறை தடுப்பு சட்டம் வருமா..ராகுல்ஜீ?

rahul

சரக்கு இல்லாவிட்டாலும், ஒவ்வொரு மேடையிலும், ‘நான் பிரதமர் மோடியைப் பார்த்து கேட்கிறேன்?’என்ற கேள்வியை எழுப்ப ராவுல் வின்சி காண்டி தவறுவது இல்லை. இப்படித்தான் ராவுல் கேட்ட ராபெல் விமானம் குறித்த கேள்விக்கு, 8 வயது பெண் குழந்தை ஜாமின்றி பாக்சை வைத்து விளக்கம் கொடுத்து, அவரது முகத்தில் கரியைப் பூசியுள்ளது. துபாயில் 14 வயது பெண் குழந்தை தன் பங்குக்கு ராவுலை போட்டுப் பார்த்துவிட்டது. இப்படி குழந்தைகளிடம் அடிவாங்கத் தொடங்கியிருக்கும் ராவுலுக்கு, இந்துக்கள் சார்பில் ஒரு கேள்வி? காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத வன்முறை தடுப்பு சட்டம் வருமா?

சோனியாவும் கிறிஸ்தவ விசுவாசமும்!

காங்கிரஸ் கட்சி 1996ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், காங்கிரஸ் தலைமை தவித்தது. சீத்தராம் கேசரி, மீண்டும் நேருவின் பரம்பரையிடம் போய் காங்கிரஸ் கட்சியின் கதர் குல்லாவுடன் மண்டியிட்டார். சோனியாவின் காலில், காங்கிரஸ் குல்லாவை கழற்றி வைத்து, நீங்கள் வந்தால் மட்டுமே கட்சியைக் காப்பாற்ற முடியும் என்று புலம்பினார். நேருவின் பரம்பரைக்குப் பின்னர் இந்தியர் வசம் வந்த காங்கிரஸ், மீண்டும் இத்தாலியின் கிறிஸ்தவ வெறி பிடித்த சோனியாவின் வசம் சென்றது.

முதலில் தயங்கினாலும், தன் எதிர்கால அரசியல் ஆதாயம், வாடிகனின் உத்தரவை அமலாக்கம் செய்திட, காங்கிரஸ் என்ற இயக்கத்தின் பதவியை சோனியா ஏற்றுக் கொண்டார்.

power

கம்யூனல் வயலன்ஸ் பில்!

( மத வன்முறை தடுப்புச் சட்டம்) என்றால் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்

தன் மதத்தின் மீதான விசுவாசத்தை நிலை நாட்டவும், இந்துக்களை அடித்து நொறுக்கும் வகையிலும், இத்தாலியின் சோனியா கொண்டு வந்ததுதான் கம்யூனல் வயன்ஸ் பில் எனப்படும் மத வன்முறைத் தடுப்புச் சட்டம். சோனியாவின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், 2வது 5ம் ஆண்டு காலத்தில் குறிப்பாக 2010–11ம் ஆண்டில், சோனியாவின் தலைமையிலான கும்பல் செய்த அட்டகாசத்தின் உச்சகட்டம் இந்த மதவன்முறைத் தடுப்புச்சட்டம் என்றால் அது மிகையல்ல.

ஆங்கிலேயர்கள்!

காரணம், கிறிஸ்தவர்கள் தங்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க, எப்படி ஒரு ஆங்கிலேய கிறிஸ்தவ நீதிபதியை நியமித்து சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்க முயன்றார்களோ, ஏறக்குறைய அதேபோன்ற வழியைப் பின்பற்றி, இந்துக்களை அவர்கள் கைகளை வைத்தே கண்களை குத்தும் விதமாக இந்தச் சட்டத்தை சோனியாவின் நிர்வாகம் முன்வைக்க முயன்றது.

என்ன சொன்னது சோனியா தலைமையிலான கவுன்சில்?

காங்கிரஸ் தலைவியாக இருந்த சோனியாவின் தலைமையின் கீழ் இயங்கிய 12 பேர் கொண்ட தேசிய ஆலோசனைக் கவுன்சில்தான் மத வன்முறைத் தடுப்புச் சட்ட மசோதாவைத் தயாரித்தது.

 

இந்துக்களுக்கு பாதுகாப்பு!

இந்தச் சட்டம் குறித்து பேசிய 12 கொண்ட குழுவின் உறுப்பினரான ஹர்ஷ் மந்தர் என்ன சொன்னார் தெரியுமா? இந்தியாவில் காஷ்மீர், பஞ்சாப் மற்றும் வடகிழக்கு பகுதிகள் உட்பட 7 மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இந்த மதக் கலவரத் தடுப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், இந்த மாநிலங்களில் இந்துக்களுக்கு முழுப் பாதுகாப்பு ஏற்படும். அவர்கள் சுதந்திரமான வாழ்க்கையை முறையை இந்தச் சட்டம் உறுதி செய்யும்’ என்று மீடியாக்களுக்கு சொன்னார்.

 

திருப்பியடித்த அருண் ஜெட்லி!

Jaipur: Union ministers and senior BJP leaders Arun Jaitley talks to the media at the release of the party manifesto for the Assembly elections, in Jaipur, Tuesday, Nov 27, 2018. (PTI Photo)   (PTI11_27_2018_000048B)

தேசிய ஆலோசனைக் கவுன்சில் முன்வைத்த மத வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் ஷரத்துக்களைப் படித்துப் பார்த்த இப்போதைய நிதி அமைச்சரும், அப்போதைய எம்பியுமான அருண்ஜெட்லி இந்த சட்ட முன்வடிவத்தைக் கடுமையாக எதிர்த்தார். இந்துக்கள் சிறுபான்மையாக இருக்கும் மாநிலங்களில் அவர்களைக் காப்பாற்றுவதற்காக கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் மத மோதல்கள் நிகழ்ந்தாலும், அது சிறுபான்மை மத மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாக இருந்து, அந்தக் கலவரம் அவர்களால் தொடங்கப்பட்டாலும், அந்தப் பகுதியில் வாழும் வயது வந்த இந்து ஆண்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று கருதப்படுவார்கள். இந்தச் சட்டம் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களில் என்ன மாதிரியான அபாயங்களை ஏற்படுத்தும் என்ற கேள்வியை அருண்ஜெட்லி முன்வைத்தார்

 

விவாதங்கள்!

delhi

இதனால், பதறிப்போன சோனியாவின் ஆலோசனைக் குழு 2011ம் ஆண்டு மே 25ம் தேதி இது குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் செய்தது. அதில் 45 மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் செய்வதாக உறுதியளித் தது. ஆனால், எந்த ஒரு சூழ்நிலை யிலும் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற தாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று பாரதிய ஜனதா லோக்சபா, ராஜ்யசபாவில் முட்டுக்கட்டை போட்டது. அதேநேரத்தில், இந்த சட்டத்தின் விபரீதங்கள் குறித்து இப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சரும், 2011ல் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளருமாக இருந்த நிர்மலா சீத்தாராமன் மீடியாக்கள் முன்னிலையில் உண்மைகளை உடைத்தார்.

 

” நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் மத மோதல்கள் நிகழ்ந்தாலும், அது சிறுபான்மை மத மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாக இருந்து, அந்தக் கலவரம் அவர்களால் தொடங்கப்பட்டாலும், அந்தப் பகுதியில் வாழும் வயது வந்த இந்து ஆண்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று கருதப்படுவார்கள்”.

மத வன்முறை தடுப்பு சட்டம் வந்தால் இந்துக்களின் நிலை என்ன?!

இந்துக்கள் அதிகமாக உள்ள ஒரு தெருவில், புதிதாக ஒரு முஸ்லிம் வீடு தேடுகிறார். வீட்டின் உரிமையாளர் கோவைக்காரர் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு 1998ம் ஆண்டு அமைதி மார்க்கத்தினர் செய்த செயல்கள் கண்ணில் நிழலாடுகிறது. ‘மன்னிக்கவும் வீடு வாடகைக்கு கொடுக்க முடியாது’ என்று அனுப்பி விடுகிறார். வீடு பார்க்க வந்த முஸ்லிம், நேரடியாக போலீசுக்குப் போகலாம். ‘என்னை இவர் சிறுபான்மையினர் என்று கூறி வேறுபடுத்துகிறார்’ என்று ஒரு மனு கொடுத்தால் போதும்.

விசாரணை இல்லாமல் கைது செய்து சிறையில் அடைக்கலாம். இந்த வழக்கு விசாரணைக்காக கோர்ட் படியேறினால், அங்கேயும் ஒரு சிறுபான்மை இன நீதிபதிதான் விசாரிப்பார்.

ஏதோ ஒரு இக்கட்டான சூழ்நிலையில், சில சமூக விரோதிகள் பெண்களை கேலி, கிண்டல் செய்யலாம். மத வழிபாடுகளை கொச்சைப்படுத்தும் சூழ்நிலை வரலாம் (அதான் லயோலா செய்து கொண்டிருக்கிறதே). இதுகுறித்து நீங்கள் போலீசில் போய் புகார் செய்தால், உங்கள் புகார் எடுபடாது. மாறாக, என் மீது அவர் பொய் குற்றச்சாட்டு கூறுகிறார் என்பதாக, சம்பந்தப்பட்ட சிறுபான்மை சமூக விரோதிகள் புகார் கொடுத்தால், போலீஸ் ஸடேஷன் போன இந்துக்கு சிறை உறுதி.

அதேநேரத்தில், நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் மத மோதல்கள் நிகழ்ந்தாலும், அது சிறுபான்மை மத மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாக இருந்து, அந்தக் கலவரம் அவர்களால் தொடங்கப்பட்டாலும், அந்தப் பகுதியில் வாழும் வயது வந்த இந்து ஆண்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று கருதப்படுவார்கள்.

அந்தக் கலவரத்தில் இந்துப் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டா லும், அது பலாத்காரமாக கருதப்பட மாட்டாது.

சரி, இந்துக்கள் பெரும்பான்மையினர் வாழும் பகுதியில் இந்துப் பெண் ஒருவர் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களால் பலாத்காரம் செய்யப் பட்டு, தனக்கு நீதிகேட்டு போலீஸ் நிலையம் சென்றால், அவருக்கு அங்கே அவமானம்தான் கிடைக்கும். நீதி கிடைக்காது. மாறாக, சிறுபான்மை யினர் மீது வெறுப்பை உமிழ்வதாக கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணை சிறையில் அடைக்கலாம். இதெல்லாம் இந்தச் சட்ட முன்வடிவில் காங்கிரஸ் கொண்டு வந்த சிறப்பம்சங்கள்.

அட இதுல கூட பாதுகாப்பு பாருங்க...

மதக்கலரத்தடுப்புச் சட்ட முன் வடிவத்தின் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், பெரும்பான்மை இனமக்கள் மீது புகார் கொடுத்தவர் என்று யார் என்று கேள்வி எழுப்பிட முடியாது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சுங்கத்துறையில் உள்ள இன்பார்மர்கள் போல், இதிலும் ரகசியம் காக்கப்படும். ‘என் மீது புகார் கொடுத்தவர் பெயர்? முகவரி கூறுங்கள்’ என்று உரிமையான, நியாயமான கேள்விகளையும் போலீசில் நீங்கள் கேட்க முடியாது. அது ரகசியக் காப்புச் சட்டப் பிரிவுக்கு உட்பட்டது என்பார்கள்.

 

இந்து விழாக்களுக்கும் தடை!

இந்த சட்ட முன் வடிவு, எதிர்பாராத விதமாக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சட்டமாக்கப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுடன் அமலுக்கு வந்திருந்தால், இந்துக்கள் வாழும் பகுதியில், அது பெரும்பான்மையாக இருந்தாலும் திருவிழா கொண்டாட முடியாது. பெரும்பான்மை இந்துக்கள் நடத்தும் மத விழாக்களால், எங்களுக்கு தொல்லை உள்ளது என்று எந்த ஒரு சிறுபான்மை அமைதி மார்க்கத்தினரும், அன்பு மார்க்கத்தினரும் போலீசில் போய் புகார் கொடுத்தால்போதும், அப்படியே காவல்துறை வந்து விழாப் பந்தலை பிரித்து மேய்ந்துவிடுவார்கள்.

முன்னெச்சரிக்கையாக போலீசாருக்கு அனுமதி கடிதம் கொடுத்தாலும், அதில், உங்கள் பகுதியில் உள்ள சிறுபான்மை இன மக்களின் தடையில்லாச் சான்று (என்ஓசி) வாங்கி இணைத்துக் கொடுக்க வேண்டும். இந்த என்ஓசியை ரத்து செய்யும் அதிகாரமும் அதைக் கொடுத்தவர்களுக்கு உள்ளது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

 

பாரதிய ஜனதாவை எதிர்க்கும் சிறுபான்மையினர்

இரண்டு விஷயங்களால் சிறுபான்மை இனமக்கள் பாஜகவை எதிர்க்கின்றனர். ஒன்று பாஜக என்பது இந்துக்களுக்கான கட்சி. மற்றொன்று இந்தக் கட்சியால் ஹவாலா பணப் பரிவர்த்தனை, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, மத மாற்றம், வெளிநாட்டு நிதிகள் முடங்கிவிட்டன என்ற 2வது காரணம், பாஜக எதிர்ப்புக்கு போதுமானதாக உள்ளது. இதனால், வரும் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தங்கள் வளர்ச்சிக்கும், அட்டகாசத்துக்கும் முட்டுக்கட்டையாக இருக்கும் பாஜகாவை அகற்றிவிட்டு, முஸ்லிம் வழிவந்து, கிறிஸ்தவத்தின் பிடியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை பதவியில் அமர்த்தத் துடிக்கின்றனர் பிற மதத்தினர்

 
 

இந்துக்கள் செய்ய வேண்டியது என்ன?

சீனாவில் புத்தமத்துக்கும், கம்யூனிஸ்ட் அரசுக்கும் பெரும் சவால் விடுத்துக் கொண்டிருந்தவை 2 விஷயங்கள். ஒன்று கிறிஸ்தவம், இன்னொன்று உகிர் இன முஸ்லிம்கள். தன் நாட்டின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்றால், இவற்றை ஒடுக்க வேண்டும் என்ற நிலையில் உள்ள சீன அரசு, இப்போது அந்த நடவடிக்கைகளை தரமாக மேற் கொண்டு வருகிறது. இந்தியா அந்தளவுக்கு கொடூரமான நாடு அல்ல. உலகுக்கு வாழ்வியல் தத்துவங்களை போதித்த நாடு. சிறுபான்மையினர் அவர்கள் அவர்களாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், இந்துக்கள் இந்துக்களாக சுய மரியாதையுடன் வாழ வேண்டும் என்றால், பாஜகாவுக்கு வாக்களிப்பது சாலச்சிறந்தது.