இந்துக் கோவில்கள் வழி வரும் வருமானம்!

பழனி தண்டாயுதபாணி கோவி லில் பக்தர்களால் வரும் வருமானம் மட்டும் 150 கோடிகள்.

திருவள்ளூர் வீரராகவன், சோளிங்கர், வேலூர் – ரத்னகிரி, திருத்தணி முருகன் கோவிலில் பக்தர் களால் வருமானம் 150 கோடிகள்

மதுரை மீனாட்சி, அழகர், கூடல் கோவில், வருமானம் 150 கோடிகள்

திருச்சி, திருவானைக்கோவில், திருவரங்கம் கோவில் வருமானம் 150 கோடிகள்

நாமக்கல் ஆஞ்சநேயர், கிரிவலப் புகழ் திருவண்ணாமலை கோவில் வருமானம் 100 கோடிகள்

சென்னை வடபழனி, பார்த்த சாரதி, கபாலி, அஷ்டலட்சுமி, காளி காம்பாள், மருந்தீஸ்வரர் கோவில்கள் வருமானம் 150கோடிகள்

தேனி வீரபாண்டி கோவில், மாங்காடு காமாட்சி அம்மன், திருவேற் காடு கருமாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், பண்ணாரி அம்மன், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்கள் வருமானம் 200 கோடிகள்

கும்பகோண மகாமகக் கோவில்கள், தஞ்சைக் கோவில்கள் வருமானம் 100 கோடிகள்

ராமேஸ்வரம், நெல்லையப்பர், சுசீந்திரம், கன்னியாகுமரி கோவில்கள் வருமானம் 150 கோடிகள்

கோவை ஈச்சனாரி விநாயகர், மருதமலை, பேரூர், ஈரோடு, திருப்பூர்,நீலகிரி,சத்தியமங்கலம் கோவில்கள் வருமானம் 150 கோடிகள்

திருச்செந்தூர் முருகன், தென்காசி கோமதியம்மன், ராஜபாளையம், விருதுநகர், சிவகாசி,கோவில்பட்டி, குற்றாலீஸ்வரர் கோவில்கள் வருமானம் 150 கோடிகள்

பிள்ளையார்பட்டி விநாயகர், குன்றக்குடி முருகன், காரைக்குடி, புதுக்கோட்டை கோவில்கள் வருமானம் 100 கோடிகள்

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோபி, விழுப்புரம், கோவில்கள் 100 கோடிகள்

திண்டுக்கல், காஞ்சி,கரூர், திருவாரூர், நாகப்பட்டினம்,கடலூர், கோவில்கள் வருமானம் 100கோடிகள்

இதுபோக உண்டியல் வைத்த ஆயிரமாயிரம் கோவில்கள் அதன் சொத்துக்களும் இந்த அரசுத் துறையின் கீழ் வருபவையே

(இந்த கணக்குகள் 2007 ஆண்டு சேர்ந்தவை இப்பொழுது எவ்வளவு என்று உங்கள் கற்பனைக்கே)

ஆக இந்துக் கோவில்களில் பக்தர்கள் உண்டியல் மூலம், நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றுதல் மூலம், திருக்கல்யாணம், தேர் இழுப்பு, முடி இறக்குதல், அர்ச்சனை, அபிஷேகம், என்பதான சடங்குகள் மூலம், பிரசாத விற்பனை என்பதன் மூலமும், வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களுக்கு மன்னர்கள் எழுதி வைத்த பல ஆயிரம் ஏக்கர்கள் நிலங்கள், கோவிலைச் சுற்றிய வீதிகளில் இருக்கும் கடைகள் மூலம் மிகமிகக் குறைந்த குத்தகை இவைகளின்று வரும் வருமானத்தின் அளவு என்பது..

150+150+150+150+100+150+200+100+150+150+100+100+100= 1800கோடிகள்

குறைந்தபட்ச வருமானம் என்பது கோவில்கள் வாயிலாக 1800 கோடிகள்.

கோவில்கள் வழியாக வரும் இதுபோக சைவ ஆதீனங்களது சொத்துக்கள் வழியாக வரும் வருமானம் வேறு. பல ஆயிரம் கோடி சொத்துக்கள் பல்வேறு சைவ ஆதினங்களுக்குச் சொந்தமானவை.

மேல்மருவத்தூர் கோவில் நிறுவனம் இந்தத் துறையின் கீழ்வராததால் விளைந்த நன்மைகள்!

பாலி டெக்னிக் கல்லூரி

இஞ்சினியரிங் கல்லூரி

மருத்துவப் படிப்புக் கல்லூரி + மருத்துவமனை என மக்களுக்கு பக்தர்களின் காணிக்கை, சடங்குகள் வழி வருமானம் செலவிடப்பட்டிருக்கிறது.

காஞ்சி சங்கரமடம் மற்றும் மடத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஞ்சி காமாஷி கோவில் + இதர கோவில்கள் வழி பக்தர்கள் அளிக்கும் காணிக்கை, சடங்குகள், ப்ரஸாத விற்பனை வருமானம் சங்கரா பள்ளிகளாக, சங்கரா கல்லூரிகளாக தமிழகமெங்கும் மக்களுக்கு உதவும் வழியில் செலவிடப்பட்டு வருகின்றன.

இந்துமதம் கிறித்துவ மிஷநரி மாதிரி மருத்துவமனை, பள்ளிகள் என்று மக்களுக்குப் பயன்படுமாதிரியான நல்லதைச் செய்வதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு!

1800 கோடிகளைச் செலவழித்து 50 கல்லூரிகள் கட்டலாம். படிப்புக்கு இட ஒதுக்கீடு அவசியப்படாமல் கேட்டால் படிப்பு கிடைக்கும் படி இட ஒதுக்கீட்டை இல்லாமல் ஆக்கிவிடலாம். மருத்துவ மனைகள் பல கட்டி மக்களின் சுகாதார, ஆரோக்கியம் பேணலாம்.

இந்துக் கோவில்கள் வழி வரும் 18000 கோடி வருமானத்தை கடவுளே இல்லை.. இல்லை.இல்லை கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்கிற கொள்ளைக்கூட்டம் கொள்ளையடிக்கிறது தமிழக அரசு அதிகாரத்தில் 40 ஆண்டுகளாக இருந்தபடியே.

வெட்டியான பிராமண எதிர்ப்பு என்பதில் மக்களை திசைதிருப்பி, காணிக்கையை உண்டியலில் மட்டுமே போடவும் என்று அறிவிப்புப் பலகைகள் வைத்து, மிக மலிவாக குத்தகையை கழகக் கண்மணிகளுக்கு விட்டு, என்று எல்லாவகையிலும் மொத்தமாக கோவில் வருமானங்களான நிதியைக் கொள்ளையடிப்பது தமிழக அரசுகள்.

ஆந்திராவில் திருப்பதி வெங்கடா ஜலபதி கோவில் வருமானத்தில் ஒரு யூனிவர்சிட்டி, 25 கல்லூரிகள், கல்வி நிலையங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் என இறைவனால் கிடைக்கும் வருமானம் கல்விக்கு முழுமையாகப் பயன்படுத்துகிறது…

கோவில் சொத்துக்களை வெங்காய அரசியல் தலைவர்களது பரிந்துரையினால் ஆக்ரமித்துள்ள வட்ட, மாவட்ட அரசியல் தலைவர்களது கட்டுப் பாட்டில் இருந்து இந்துக்கோவில்களின் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும்.